தத்துவங்கள்
1. நம் வாழ்க்கை, நமக்கு மட்டும்தான் வாழ்க்கை! மற்றவர்களுக்கு அது வெறும் வேடிக்கை!
2. நம்பிக்கைதான் வாழ்க்கை.. வாழ்க்கை என்னும் வண்டிக்கு
அதுதான் அச்சாணி!
3. வந்தால் வருமானம், வராவிட்டால் அனுபவம்.
4. உன் கை மூடியிருக்கும் வரைதான் பிறருக்கு ஆவல்!
5. அன்பில்லாத வாழ்க்கை என்பது மலரோ அல்லது கனியோ
தராத மொட்டைமரம்.
6. பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதையே
பிறருக்குச் செய்ய வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது.
7. எல்லா மனிதர்களிடத்தும் இறைவன் இருக்கிறான். ஆனால்,
இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான்
மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு.
8. “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!”
9. “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”
10. “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.”